முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விவகாரம்: 2-வது நாளாக கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரத்தால் கேரள சட்டப்பேரவையில் 2-வது நாளாக நேற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கட்டுப்பாடுகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

சபை ஒத்திவைப்பு

குறிப்பாக பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த கெடுபிடி நடவடிக்கைகள் கேரள சட்டசபையிலும் நேற்று முன்தினம் பெரும் புயலை கிளப்பியிருந்தது. ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

அவை ஒத்திவைப்பு

இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் கேரள சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது. சபரிமலை விவகாரம் குறித்து பேரவையில் ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எப். கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவை துவங்கியதும் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்ற  உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு சபரிமலை விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் பி ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கோரிக்கை விடுத்தனர். சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்திய பதாகைகளையும் சில உறுப்பினர்கள் கைகளில் வைத்திருந்தனர். ஆனால், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் கேள்வி நேரத்தை துவங்கினார். எனினும், உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால்,  சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அவை துவங்கிய 20-வது நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து