முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில்  பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில் அவாந்திபுரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் வேட்டை

தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவராகயிருந்த புர்கான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை  பாதுகாப்புப் படையினர் அதிகப்படுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து