முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும்: மம்தா பானர்ஜி

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : பா.ஜ.க இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், பலராம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:-

மிக சிறப்பு

கவர்னர் அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்திலும் தனது ஆதரவாளர்களை பா.ஜ.க. பணியில் நியமித்துள்ளது. எனவே, இந்தியாவை விட்டு பா.ஜ.க வெளியேற வேண்டும். அக்கட்சி இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும். மேற்கு வங்கத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது. ஆனால் அடுத்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாது.

தடம் பதிக்க முயற்சி

மத்தியப் பிரதேச தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன், மேற்குவங்கத்தில் பா.ஜ.க. தடம்பதிக்க முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து