முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் துவங்கின

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம்-ராஜபாளையம் முடங்கியாறு சாலை ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் துவங்கின.போட்டியின் துவக்க நாள் விழாவில் கல்லூhரி துணை முதல்வர் ராஜகருணாகரன் வரவேற்று பேசினார்.சர்வதேச செஸ் நடுவரான அனந்தராம் செஸ் போட்டிகள் குறித்த விதிமுறைகளை கூறினார்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு செஸ் சங்கத்தலைவர் கோபால்சாமி கலந்து போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது:
ராம்கோ கல்வி நிறுவனங்கள் தற்போது மாணவ,மாணவிகளின் அறிவை ஊக்குவிக்கும் விதமாக ராஜபாளையத்தில் முதல் முறையாக பல லட்சம் செலவில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளை நடத்துகிறது.அதற்கு முதலில் தனது பாராட்டுகளை தெரிவித்த கொள்கிறேன்.இது போன்று மாணவ,மாணவிகளை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தி, பங்கேற்க செய்து நகருக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்க்க மாணவர்கள் முன் வரவேண்டும் இவ்வாறு பேசினார்.மேலும் போட்டியில் செஸ் சங்க இணைச்செயலாளர் விஜயராகவன், கல்லூரி உடற்பயிற்சியாளர் வீரமணி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
8வயது முதல் அனைத்து வயதுக்கட்பட்டோருக்கான நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.வருகின்ற ஞாயிற்று கிழமை வரை நடைபெற்ற இப்போட்டில் வெற்றி பெரும் போட்டியாளர்க்கு ரூ.70ஆயிரம் முதல் பரிசும், மொத்தம் ரூ.5லட்சம் மதிப்பிலான பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து