முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      அரசியல்
Image Unavailable

ஐதராபாத், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அங்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் தங்களது முதல்வர் பணியாற்றுவார் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்,

பிரதமர் மோடியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் வாக்குறுதிகளை அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றுவதில்லை. நாட்டில் பெரும் பணக்காரர்கள் வாங்கிய 3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாராக உள்ளார். ஆனால், ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அவர் தயாராக இல்லை. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ. 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தெலுங்கானா வளர்ச்சி நிதியில் தனது குடும்பத்தை பணக்கார குடும்பமாக்க சந்திரசேகர ராவ் நினைக்கிறார். காங்கிரசின் திட்டங்களை பெயர் மாற்றி தன்னுடையது என கூறிக் கொள்வதையே முக்கிய வேலையாக கொண்டுள்ளார் சந்திரசேகர ராவ். விரைவில் தெலுங்கானா பெயரையும் தெலுங்கானா ஆர்.எஸ்.எஸ். என மாற்றி விடுவார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக எங்கள் முதல்வர் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் வேலை செய்வார். நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் தொழிற்சாலைகள் திரும்ப வரும். விவசாயிகளிடமே அவர்களின் நிலம் திரும்பக் கொடுக்கப்படும்.

இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து