எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிலக்கோட்டை -நிலக்கோட்டையில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 1072 பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை தமழிக வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எச்.என்.யூ.பி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எச்.என்.யூ.பி.ஆர் பள்ளி மாணவ, மாணவிகள் 708, விளாம்பட்டி கள்ளர் பள்ளிக்கு 90 பேர், நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி 274 மொத்தம் 1072 விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நிலக்கோட்டையில் உள்ள எச்.என்.யூ.பி.ஆர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை வகித்தார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், திண்டுக்கல் அதிமுக மாவட்ட செயலாளா் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்றார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி சிறப்புரையாறினார். தமிழக முதல்வர் அம்மா வழியில் தமிழக முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டு வருகிறார். அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயன்பெறும்வகையில் பல்வேறு நடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அத்திட்டங்கள் மூலம் மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் தற்சமயம் கல்வி கற்கும் பள்ளி மாணவிகள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு பள்ளி கல்வித்துறைக்கென 27400 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ, மாணவிகளுக்கென பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுமார்ட் கிளாஸ் தொடங்கவும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 468 கோடி மதிப்பீட்டில் இணையதள கல்வி முறையினை நடைமுறைப்படுத்தவும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா 25 லட்சம் மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2011 முதல் 2016 வரை 5 ஆண்டுகளில் மட்டும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 96788 மாணவ, மாணவிகளுக்கு 27.20 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 128 பள்ளிகளை சேர்ந்த 14740 மாணவர்களுக்கும், 18141 மொத்தம் 32881 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் எச்.என்.யூ.பி.ஆர் பள்ளி மாணவ, மாணவிகள் 708, விளாம்பட்டி கள்ளர் பள்ளிக்கு 90 பேர், நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி 274 மொத்தம் 1072 விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கல்வித்தரத்தை மேம்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
விழாவி்ல் முன்னாள் மேயர் மருதராஜ், முதன்மை கல்வி அலுவலர் சாந்தக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜீனத்பானு, நிலக்கோட்டை தாசில்தார் நவநீதிகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வராஜ், அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் சேகர், இந்து நாடார் உறவின்முறை மற்றும் பள்ளிகளின் குழுத் தலைவர் சுசீந்திரன், பெண்கள் பள்ளிகளின் செயலாளர் சதீஸ்குமார், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, வத்தலக்குண்டு அதிமுக ஒன்றிய கழக செயலாளர் பாண்டியன், வத்தலக்குண்டு பேரூர் செயலாளர் பீர்முகமது, பட்டிவீரன்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜசேகன்,நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் சீனவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை டி.எஸ்.பி பாலகுமரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.