முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை: சென்னை வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது,

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில், கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. கனமழையைப் பொறுத்தவரையில் கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் எதிர்பார்க்கலாம். சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை தொடரும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் நாளை (இன்று) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து