முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை இருக்கும் - சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது,

குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதி வரை தமிழக கடற்கரை பகுதிகளையொட்டி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.  அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 13 செ.மீ. மழையும், சோழவரத்தில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் இடைவெளி விட்டு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து