முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரணிலுக்கு ஆதரவாக அடுத்த வாரம் இலங்கையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அதிகாரிகள் கூறுகையில்,

இலங்கை நாடாளுமன்றம், வரும் 12-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம், அவை அலுவல்கள் முடிவு செய்யப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்படவில்லை. ஒருவேளை 12-ம் தேதியே கூட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றனர். இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் 7 நாள்களில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து