முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி, அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் படித்த மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன், பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதில் மூவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட கோரி வழக்கறிஞர்கள் ஜெய், சுகின் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற மறுத்ததோடு மனுக்களையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து