முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் ஒரே நேரத்தில் 2 வங்கிகளில் கொள்ளை - 11 பேர் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

ரியோடிஜெனிரோ : பிரேசிலின் ரியோடிஜெனிரோ நகரில் ஒரே நேரத்தில் 2 வங்கிகளில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் கொள்ளையர்கள் 6 பேர் ஒரு குழந்தை உட்பட பிணைக்கைதிகள் 5 பேர் என 11 பேர் கொல்லப்பட்டனர்.

பிரேசிலின் வடகிழக்கு நகரான மிலாகிரஸ் நகரில் நேற்று முன்தினம் இரு வங்கிகளில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் நுழைந்தது. வங்கி பணியாளர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையில் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் வங்கியில் கொள்ளையடித்த பணத்துடன் கும்பல் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு தப்பியது. அப்போது வங்கிக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 5 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். கொள்ளையர்களை விரட்டிய போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் பிணைக் கைதிகள் 5 பேரையும் சுட்டுக் கொன்றனர். போலீசார் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதில் கொள்ளையர்கள் அனைவரும் உயிரிழந்தனர். மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மேயர் லாண்டின் தெரிவித்துள்ளார். ஆனால் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் என்று பிரேசில் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து