முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்கழி மாத பிறப்பையொட்டி அழகர் கோவிலில் நடை திறப்பு மாற்றம்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

அழகர்கோவில் - மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் மார்கழி மாதம் 1 – ம் தேதி பிறப்பையொட்டி 29 ம் தேதி  வரை (16.12.2018 முதல் 13.01.2019 வரை) கீழ்காணும் விபரப்படி நடைதிறப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணிவரையிலும் பின்னர் மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில்  நடை திறக்கப்பட்டு மூடப்படும்.
 மேலும் இக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில், மற்றும்  வண்டியூர் வீரராகவ பெருமாள்கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 11.30 மணி வரையிலும் தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 வரையிலும் நடைதிறக்கப்பட்டு மூடப்படும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து