முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 23 பேர் பலி

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீரில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில்  23 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் மாண்டி அருகில் ப்ளீரா என்ற பகுதியில், நேற்று லோரானில் இருந்து பூஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இந்த கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிக்கின்றன. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து