முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

பெரம்பலூர் : தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறு பேசியதாக தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது அவதூறு வழக்கு பதியப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கில் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18-ம் தேதி தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் போராட்டத்திற்கு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசினார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் துரை. பெரியசாமி பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், அவதூறு வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஆ.ராசா மீது வழக்குபதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து