முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

ரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

4 ஆண்டுகளாக நடைபெறும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சுவீடனில் கடந்த 3 நாட்களாக சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் அரசுத் தரப்பு இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள ஏமன் அரசின் பிரதிநிதி ரனா கானெம் கூறியதாவது:-

சமாதானப் பேச்சுவார்த்தையின் போது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கைகளைப் பார்த்தால், அவர்களுக்கு அமைதிப் பேச்சுவார்த்தையில் முழு ஆர்வமில்லை என்றே தெரிகிறது. எனினும், ஏமன் மக்களின் துயரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நாட்டில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து