முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, சர்வதேச நாடுகள் இடையே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015-ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் வலைதளத்தில், பாரீஸில் மேற்கொள்ளப்பட்ட பருவ நிலை ஒப்பந்தம், அந்த நகரிலேயே தோல்வியடைந்து விட்டது. சுற்றுச்சூழலைக் காக்கிறோம் என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளுக்கு பெரும் தொகை செலவிடுவதை அந்த நகர மக்களே ஏற்கவில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலைக் காக்க எரிபொருள்களுக்கு பிரான்ஸ் அரசு வரிகளை உயர்த்தியதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து