முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகளுடன் ஒருங்கிணைந்த 181 இலவச தொலைபேசி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

பெண்களின் பாதுகாப்புக்காக 181 இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலை பேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மன நல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இந்த மையத்துடன் காவல் துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்து வரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட உள்ளது. குடும்ப வன்முறை, வரதட்சனை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல், மன நலம் பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உட்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்களை அதிகாரிகள் பதிவு செய்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டவுடன், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தசூழலில், 181 இலவச தொலைபேசி எண்ணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்கள் 181 மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த பகுதியில் பெண்ணுக்கு உதவி தேவைப்படுகிறதோ அந்த எல்லையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உடனடியாக உதவும்படி தெரிவிப்போம்.

பெண்களுக்கு கவுன்சிலிங் தேவைப்பட்டால் இலவச கவுன்சிலிங்கும், சட்ட உதவிகள் தேவைப்பட்டால் இலவச சட்ட உதவிகளும் வழங்குவோம். பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்களை மீட்டு விடுதிகளில் தங்க வைத்து, உணவு உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். மருத்துவம் தொடர்பான தேவைக்கு அழைத்தால் பாதிக்கப்பட்ட பெண் எந்த பகுதியில் உள்ளாரோ அதற்கு அருகாமையில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டு பெண்ணுக்கு உதவும்படி தெரிவிப்போம். இதுதவிர, பெண்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகள் என்னென்ன? அதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும். எந்த அதிகாரியை அணுக வேண்டும். மாணவிகளுக்கு அரசு வழங்கக் கூடிய ஸ்காலர்ஷிப்புகளின் விவரம் உட்பட அனைத்து தகவல்களும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் பெற முடியும். பெண்களுக்கு தேவையான ஒரு முழுமையான தொகுப்பாக இந்த இலவச தொலைபேசி எண் செயல்படும். பரிசோதனையின் அடிப்படை யில் கடந்த அக்டோபர் முதல் மையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து