முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு தெளிவான செய்தியை உணர்த்தி விட்டது: சிவசேனா கருத்து

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு தெளிவான செய்தியை உணர்த்தி இருக்கிறது என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் அந்த கட்சி மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது.

இது குறித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு தெளிவான பாடத்தை உணர்த்திவிட்டது. இனிமேலாவது, ஆளும் கூட்டணிக்கு குறித்து பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரத்தை உணர்த்தி இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து