முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரையிறுதியில் பா.ஜ.க. காலி 2019-ன் அறிகுறி தான் இது - மம்தா பானர்ஜி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்துவிட்டதாகவும், 2019 இறுதிப்போட்டிக்கான அறிகுறி தான் இது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொடர்ச்சியான பதிவுகள் வருமாறு,

"மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. நாட்டு மக்கள் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி இது. அநீதி, அக்கிரமம், அமைப்புகள் மீதான தாக்குதல், அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், தலித்துகள், பட்டியலின மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வேலையின்மை உள்ளிட்டவற்றுக்கு எதிராக கிடைத்த வெற்றி இது.

அரையிறுதியில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. இல்லை என்பது நிரூபனம் ஆகியுள்ளது. 2019 இறுதிப்போட்டிக்கான ஜனநாயக அறிகுறி தான் இது. மக்கள் தான் எப்போதுமே ஜனநாயகத்தின் ஆட்ட நாயகர்கள். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து