முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்ஸிட் முடிவை திரும்ப பெற பிரிட்டனுக்கு உரிமை உண்டு: கோர்ட்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரெக்ஸிட் முடிவை திரும்பப் பெறும் உரிமை பிரிட்டனுக்கு உண்டு என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியன். இதில் 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது. ஆனால் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டனின் தனித்துவம் பாதிக்கப்படுவதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து பிரிட்டன் மக்களிடம் 2016-ம் ஆண்டு ஜூனில் கருத்து ஓட்டெடுப்பு நடந்தது. பிரெக்ஸிட் எனப்பட்ட இந்த ஓட்டெடுப்பில் விலகுவதற்கு ஆதரவு அதிகம் இருந்தது. இதனால், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய வரைவு விதிமுறைகளை பிரதமர் தெரசா மே வெளியிட்டார். ஆனால் அதற்கு ஆளும் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுவரை 7 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பிரெக்ஸிட்க்கு எதிரான பிரசாரங்கள் பிரிட்டனில் வலுவடைந்து வருகிறது. பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகக்கூடாது என தெரிவித்து வருகின்றனர்.

பிரெக்ஸிட் தொடர்பாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சில தலைவர்கள் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து விலகும் முடிவை பிரிட்டன் மாற்றிக் கொள்ள விரும்பினால், அந்த நாட்டின் அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டால் போதுமானது. இதற்கு ஐரோப்பிய யூனியனின் பிற உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து