முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

டெஹ்ரான் : நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

நடுத்தர தொலைவு ஏவுகணையை செலுத்தி ஈரான் இந்த மாதம் 1-ம் தேதி சோதனையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் உண்மை என அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஈரான் தனது ஏவுகணை பரிசோதனைகளைத் தொடரும் எனவும், அண்மையில் நடந்துள்ள சோதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஈரான் ராணுவத்தின் வான்மண்டலப் பிரிவு தளபதி அமீரலி ஹாஜிஸாதே கூறினார். இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் அந்த நாட்டை மிகவும் கவலையடையச் செய்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து