எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மத்திய கூட்டுறவு வங்கியின் கீழையூர் கிளையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, கீழையூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 44வது கிளையினை மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு நேற்று திறந்து வைத்து 335 பயனாளிகளுக்கு ரூ.1,61,47,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, விவசாயிகளின் நலன் கருதி மத்திய கூட்டுறவு வங்கியின் 44 - வது கிளை கீழையூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இரு மடங்காக உற்பத்தி, மூன்று மடங்காக வருமானம் பெறும் பொருட்டு 2011 முதல் 30.11.2018 வரை 76,95,561 விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.38,728.08 கோடி அளவிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2018-19) மட்டும் மாநில அளவில் ரூ.8000 கோடி வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட வேண்டும் என குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, 30.11.2018 வரை, 6,55,099 விவசாயிகளுக்கு ரூ.4,518.01 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு ரூ.160 கோடி அளவிற்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை, 10,382 விவசாயிகளுக்கு ரூ.74.91 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 43 கிளைகளுடன் மதுரை மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தினை முழுமையாக செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கீழையூர் கிளை மூலமாக மேலூர் தாலுகாவில் உள்ள கீழையூர், கீழவளவு, கொங்கம்பட்டி, சருகுவலையப்பட்டி, தனியாமங்கலம், நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, பூதமங்கலம் மற்றும் எட்டிமங்கலம் ஆகிய ஏழு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின், விவகார எல்லையில் உள்ள 16 வருவாய் கிராமங்களில் உள்ள மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பயனடைவார்கள்.
இவ்வங்கி மைய வங்கியியல் தீர்வு முறை மூலம் அனைத்து கிளைகளும் கணினிமயமாக்கப்பட்டு விரைவான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இவ்வங்கியின் பிரதான கிளையில் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம் நிறுவப்பட்டு 6,877 வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 131 பொதுச் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்களுக்கு சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், திருமண உதவி நலத்திட்ட சான்றிதழ், பட்டா, சிட்டா நகல் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்குவதற்காகவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 2,104 வேளாண் சேவை மையங்கள் துவங்கப்பட்டன. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 30.11.2018 வரை தமிழகம் முழுவதும் உள்ள 12,70,285 விவசாயிகளுக்கு ரூ.3,613.61 கோடியும், மதுரை மாவட்டத்தில் 13,854 விவசாயிகளுக்கு ரூ.36.64 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உன்னதத்திட்டமான அம்மா மருந்தகம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் 15 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளைப் பெற்று பயனடையும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா மருந்தகங்கள் மற்றும் 20 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 35 மருந்தகங்கள் மூலம் இதுவரை ரூ.54.67 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் 111 அம்மா மருந்தகங்கள் மற்றும் 170 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 281 மருந்தகங்கள் மூலம் 30.11.2018 வரை ரூ.686.89 கோடி மதிப்பிலான தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் அம்மாவின் ஆணையின்படி, ஏழை, எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மகத்தான திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின்படி 1,78,21.946 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் அரும்பணியினை கூட்டுறவுத்துறையால் நடத்தப்பட்ட 32,793 நியாயவிலைக்கடைகள் மேற்கொண்டு வருகின்றன. கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுவிநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் புகார்கள் ஏதுமின்றி பணியாற்றிட வேண்டும் எனவும், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் இப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்துக் கொள்ளுமாறும், தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் 72 பயனாளிகளுக்கு ரூ.33,12,000 மதிப்பிலான முதலீட்டுக்கடன்களும், 175 பயனாளிகளுக்கு ரூ.28,30,000 மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழு கடன்களும், 58 பயனாளிகளுக்கு ரூ.43,05,000 மதிப்பிலான பயிர்க்கடன்களும், 20 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 மதிப்பிலான மகளிர் சிறு வணிக கடன்களும், 10 பயனாளிகளுக்கு ரூ.52,00,000 மதிப்பிலான பணியாளர்கள் சிக்கன நாணயச்சங்ககடன்கள் என மொத்தம் 335 பயனாளிகளுக்கு ரூ.1,61,47,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் பா.இராஜேஸ் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ம.தீபாசங்கரி, மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் மல்லிகா, துணைப்பதிவாளர்கள், வங்கி அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.