முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்தது கிடையாது - கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கோவை : காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்ததே கிடையாது என்று கோவையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறியதாவது.,

கஜா புயலால் பாதிப்புக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே தமிழத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு 15 ஆயிரம் கோடி தேவை என்று தெரிவித்திருந்தோம். தற்போது மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. பெங்களூர் நகர் குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் அணை கட்டவுள்ளதாக வெறும் சாக்குபோக்குகாக கர்நாக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி நீரை நம்பியுள்ள தமிழக்தின் 20 மாவட்டங்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்படும். காவிரியில் கபினி அணை கட்டியதால் 17 டி.எம்.சி. தண்ணீரும், ஹேமாவதி அணை கட்டிய போது 35 டி.எம்.சி. தண்ணீரும் அவர்களுக்கு போனது. ஒவ்வொரு தடவை அணை கட்டும்போதும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. காவிரியில் கர்நாடக அரசு அணைகள் கட்டாத போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படவில்லை.

நம்முடைய குடிநீர் தேவைக்காக 3 டி.எம்.சி. தண்ணீர் கேட்டபோது, அப்போது கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா தண்ணீர் தர மறுத்தார். ஆனால் அவர்களிடம் 34 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. தண்ணீர் வைத்துக்கொண்டே தண்ணீர் தர மறுத்தார்கள். தற்போது மேகதாதவில் அணை கட்டினால் அங்கு 64 டி.எம்.சி. அளவு தண்ணீர் தேக்கப்பட்டுவிடும். இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்படும்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கர்நாடக அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு ஒருபோதும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்தது இல்லை என்றார். மேலும் அவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து தெரிவிக்கையில், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுதான் ஆக வேண்டும். தமிழக பொறுத்தவரை கழக ஆட்சிகளே மேலோங்கி நிற்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து