எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி,- தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நேற்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவினை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, 1400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைகளுக்கான பொருட்களை வழங்கி விழாவினை நடத்தி வைத்தார்.
விழாவினை தொடங்கி வைத்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்ததாவது:-
அம்மாவின் வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பதவி, சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. கருவுற்ற காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு சமுதாய வளைகாப்பு என்னும் சமுதாய விழிப்புணர்வு விழா பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுகிறது.
அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் மொத்தம் 1400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர் வரிசைகள் மற்றும் 5 வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாத்திடவும், ஆண் குழந்தைகளை மட்டும் விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும், இரண்டு குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்வதை ஊக்கப்படுத்திடும் வகையிலும் தமிழக அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
பணிக்கு செல்லும் மகளிர்கள் தங்களது இல்லப் பணிகளையும், அலுவலகப் பணிகளையும் விரைந்து மேற்கொள்வதற்காக தமிழக அரசால் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயனடைந்து வருகின்றனர்.
தாய், சேய் நலனை மேம்படுத்திடவும், ஏற்றதாழ்வின்றி அனைத்து சடங்குகளும் அனைவருக்கும் கிடைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மனமகிழ்ச்சி அடைவதற்கும், சத்தான உணவுகளை உட்கொள்ளுவதற்கு தமிழக அரசின் சார்பில் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தற்போது 1,400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இதுவரை கடந்த 5-ஆண்டுகளில் 6,800 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் அறிவுரைகளை பெற்று சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
நமது மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நவீனமயமாக்கிடும் பொருட்டு ரூ.64.43 லட்சம் மதிப்பீட்டில் குக்கர், எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு இணைப்பு, மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.18.61 லட்சம் மதிப்பீட்டில் கடாய், கரண்டி, தட்டு, டம்ளர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.1,000 மதிப்பிலான மருத்துவப்பெட்டிகள் ரூ.10.34 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம் பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், கம்பம் எம்.எல்.ஏ. எஸ்.டி.கே.ஜக்கையன், முன்னாள் எம்.பி. சையதுகான், உதவி ஆட்சியர் (பயிற்சி) தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, உத்தமபாளையம் சார் ஆட்சியர் வைத்தியநாதன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்ரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெயலட்சுமி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாந்தி, உதவி ஆணையாளர் (கலால்) ஆர். ராஜா, உதவி திட்ட அலுவலர் தண்டபானி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அபிதாஹனீப், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, தேனி வட்டாட்சியர் சத்தியபாமா, தலைமையிடத்து வட்டாட்சியர் சுகந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ் சந்திரபோஸ், தனலட்சுமி, மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.