முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்தது

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கடந்த 57 நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த பெட்ரோல் விலை நேற்று சற்று உயர்ந்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.

அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இடையிடையே சிறிதளவு மட்டுமே குறைக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மீண்டும் உயர்வு

5 மாநில தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை குறையத் தொடங்கியது. கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பெட்ரோல் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 72.82-க்கு விற்கப்பட்ட பெட்ரோல், நேற்று ரூ.72.94 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து