எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் 1194 ஏக்கர் பாசன வசதி பெற்றிடும் வகையில் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் திரளி அணைக்கட்டு வரை ரூ.2.98கோடி மதிப்பீட்டில் கவுண்டாநதியை புனரமைத்திடும் திட்டத்திற்கான பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
குண்டாறு நதியானது மதுரை மாவட்டம் சாப்டூர் வனத்தின் வருசநாட்டு மலைப்பகுதியின் கிழக்கே ஆரம்பமாகி கவுண்டாநதி என்ற பெயரில் திருமங்கலம் வட்டம் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் சுமார் 30மீட்டர் அகலமுள்ள ஓடையாகவும்,அதன்பின்னர் சுமார் 60 முதல் 120 மீட்டர் அகலத்துடன் தென்மேற்காகச் சென்று வரட்டாறு நதியுடன் இணைகிறது. அதனை தொடர்ந்து காரியாபட்டி வட்டம் பி.புதுப்பட்டி அருகே தெற்காறுடன் இணைந்த பின் குண்டாறு என்று அழைக்கப்படுகிறது.இதனிடையே கவுண்டநதியை சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் திரளி அணைக்கட்டு வரை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் பொதுப்பணித் துறை மூலம் ரூ.2.98கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஇந்த திட்டத்தின் கீழ் கவுண்டாநதியை சௌடார்பட்டி அணைக்கட்டிலிருந்து திரளி அணைக்கட்டு வரை சுமார் 9.10 கி.மீ நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி இயந்திரங்கள் மூலம் ஆற்றுப்படுகையில் படிந்துள்ள மண்மேடுகளை அகற்றி,மேடு பள்ளங்களை ஆற்றின் படுகை மட்டத்திற்கு சமன்படுத்தி இருபுறமும் கரைகள் அமைத்து புனரமைத்திட திட்டமிடப்படுள்ளது.
மேலும் சிறு ஓடைகள் ஆற்றில் கலக்கும் இடங்களில் அரிமானங்களை தடுக்க உரிய சுவர்களும்,ஆக்கிரமிப்புகளை தடுத்திடும் பொருட்டு நில அளவை செய்து எல்லை கற்கள் நடவும் திட்டமிடப்படுள்ளதுடன் கவுண்டாநதியின் ஆற்றின் குறுக்கே சௌடார்பட்டி அணைக்கட்டினை புனரமைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சௌடார்பட்டி,கிழவனேரிதங்களாச்சேரி,திரளி(பெரிய) உள்ளிட்ட கண்மாய்களின் மூலம் சுமார் 1194 ஏக்கர் நிலம் பாசனவசதி உறுதி செய்யப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரித்து திருமங்கலம் வட்டத்திலுள்ள சௌடார்பட்டி தங்களாச்சேரி,கிழவனேரி,மீனாட்சிபுரம்பொன்னம்பட்டி,நடுவக்கோட்டை மற்றும் திரளி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்றிடுவார்கள்.மேலும் இந்த பகுதியில் நிலத்தடிமட்டம் வெகுவாக உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறது.
அதன்படி திருமங்கலம் வட்டத்தில் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல்திரளி அணைக்கட்டு வரை கவுண்டாநதியை ரூ.2.98கோடி மதிப்பீட்டில் புனரமைத்திடும் திட்டத்திற்கான பூமிபூஜை விழா நடுவக்கோட்டை பகுதி கவுண்டாநதி அணைக்கட்டு பகுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்தார்.பொதுப்பணித்துறையின் குண்டாறு வடிநில மேம்பாடு செயற்பொறியாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தார்.உதவி செயற் பொறியாளர் லீலாவதி வரவேற்றார்.ஏராளமான விவசாய பெருமக்களும்,பொதுமக்களும் கலந்து கொண்ட இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ரூ.2.98கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் வட்டத்தில் 1194 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிடும் வகையில் கவுண்டாநதியை புனரமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் நடுவக்கோட்டை ஆற்றுப்பகுதியில் புனரமைப்பு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: சாப்டூர் வனப்பகுதியிலிருந்து சௌடார்பட்டி வரையில் 34 கி.மீ தூரமும், ஏறத்தாழ 100கிமீ முன்பாக உருவான காட்டாறு ஆகும்.இது வரும் பகுதியில் மரம்,செடி,கொடி இருந்ததால் நீர்வரத்து முழுமையாக உள்வாங்குவதில் சிரமம் இருந்தது.இதையும் தாண்டி வரும்நீர்வரத்து ஆங்காங்கே வெளியேறிச் சென்றிடும் வகையில் விவசாயிகளுக்கு பயன்தராத வகையில் இருந்தது.இதனை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் லீலாவதி,விஸ்வநாத் ஆகியோர் கொண்டு சென்றதன் பேரில் இந்த கவுண்டாநதியை புனரமைத்திடும் திட்டம் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.தற்போது சௌடார்பட்டி முதல் திரளி வரை ரூ.2.98கோடி செலவிலும்,அரசபட்டி முதல் குராயூர் வரையிலும் பின்னர் சென்னம்பட்டி வரையிலும் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது.தற்போது அரசபட்டி முதல் குராயூர் வரையிலான திட்டமதிப்பீடு தயார் நிலையில் உள்ளது.இதனால் சாப்டூர் வனப்பகுதியில் நமக்கு என்ன நீர்வரத்து கிடைக்கிறதோ அதனை முழுமையாக இந்த பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுத்திட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றைக்கு தண்ணீரின் அவசியத்தை நாம் முழுமையாக உணர்ந்து இருக்கிறோம்.அதனால் தான் மன்னராட்சி காலத்தில் இருந்த குடிமராமத்து திட்டத்தினை நாம் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.தற்போது முதல்வர் வெளியிட்டுள்ள அரசாணையில், 6மாத காலத்திற்கு எந்தெந்த அரசுநிலங்களில் ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறதோ அதற்கெல்லாம் பட்டா வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவற்றில் ஆட்சேபகரமான புறம்போக்கில் இருந்தால் அதற்கு பதிலாக பட்டா இல்லாமல் தனியார் நிலங்களை கொள்முதல் செய்து அந்த நிலங்களில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி கொடுக்கக்கூடிய உத்தரவையும் முதல்வர் தந்துள்ளார்.யாரெல்லாம் அரசு நிலங்களில் 5ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகளை கட்டி குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்கும் சூழலை முதல்வர் உருவாக்கி தந்துள்ளார்.இருப்பினும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மட்டும் தனியாக அடுக்குமாடி குடியிருப்பகள் கட்டித் தந்திடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.இந்த திட்டத்தின் மூலம் நாம் வாழ்ந்திடும் இந்த பூமியில் சொந்தமாக ஒருபிடி மண் இல்லையே என்று ஏங்கித் தவித்திடும் நிலையை மாற்றி அரசே முன்வந்து அரசு நிலத்தை பட்டா போட்டு வழங்கிடும் ஒரு கனிவானஅரசு அம்மாவுடைய அரசு என்பது இந்த அரசாணையின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்று பேசினார்.
இவ்விழாவில் திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ரவிகுமார்,குணசேகரன்,ராமச்சந்திரன்,மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிஅணிச் செயலாளர் திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் சரவணன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,கோடீஸ்வரன்,ஜெயமணி,செல்வம்,ஆறுமுகம்,வேல்ராமகிருஷ்ணன்,மாரிச்சாமி,கண்ணன்,செல்வம்,போதுராமன்,சக்தி,விஜி,போதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.