முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி அமித்ஷா வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா,
ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் உண்மை வெண்றுள்ளது. ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு பொய்யை பரப்பும்(காங்கிரசின்) அரசியலுக்கு கிடைத்த அடி. ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்த முயன்றது முறியடிக்கப்பட்டுள்ளது. ரபேல் போர் விமான கொள்முதல் பற்றிய பொய்ப் பரப்புரைக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரபேல் விவகாரத்தில் எந்த அடிப்படையில் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார் என விளக்கம் தர வேண்டும் என்றார் அமித்ஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து