முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் தந்த வாக்குறுதிப்படி 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: கமல்நாத்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால்,  தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, கமல்நாத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சி தலைவராக கமல்நாத் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.    72 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மத்திய அமைச்சராக பலமுறை பதவி வகித்துள்ளார். இப்போது முதல்முறையாக மத்தியப் பிரதேச முதல்வராக வரும் 17 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா, போபாலில் உள்ள லால் பாரடே கிரவுண்டில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென்பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில், முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தேர்சல் பிரசாரத்தின் தலைவர் ராகுல்காந்தி மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைத்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளூபடி செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்படி எனது தலைமையிலான ஆட்சி பதிவியேற்றவுடன் முதல் பணியாக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்படும் என தெரிவித்தார் கமல்நாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து