முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ராஜபக்சே

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ல் நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் இலங்கையில் ஏராளமான அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. பாராளுமன்றத்தில் அடுத்தடுத்து பலமுறை நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பிலும் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதன் காரணமாக இலங்கை பார்லியை கலைப்பதாக அறிவித்த அதிபர் சிறிசேனா, ஜனவரி 5 ல் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவை செயல்படவும் இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து ராஜபக்சே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பார்லி கலைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சிறிசேனாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அதிபர் சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய சிறிசேனா, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக முடிவு செய்து இருப்பதாக அவரது மகன் நமல் ராஜபக்சே குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து நேற்று ராஜபக்சே விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து