முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் சேருகிறார் ஆம் ஆத்மி தலைவர்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முக்கியத் தலைவருமான குமார் விஸ்வாஸ் பா.ஜ.க.வில் சேருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காதமையால் அவர் அதிருப்தியில் உள்ளார்.

இந்தி பேராசிரியரான குமார் விஸ்வாஸின் கவிதைகள் மிகவும் பிரபலம். இதில் அரசியல் கலந்து அவர் விடுக்கும் இந்தி கவிதைகள் பலவும் யூ டியூப்பிலும் வைரலாகி உள்ளன. கடந்த மக்களவை தேர்தலில் உ.பி.யின் அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். முதல் ஆம் ஆத்மி கட்சியின் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் குமார் விஸ்வாஸ், பா.ஜ.க.வில் சேருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து உ.பி. பா.ஜ.க.வினர் கூறும் போது,

நாளை(இன்று) ரேபரேலி வரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் குமார் விஸ்வாஸ் சந்தித்த பின் பா.ஜ.கவில் சேருகிறார். இவர் வரும் மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை அல்லது ரேபரேலியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிடுவார் எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து