முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: ராகுல் உறுதி

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி 3 மாநிலங்களிலும் விவசாயக் கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மூன்று மாநிலங்களில் முதல்வர்களை நியமிப்பதில் கட்சி தலைமை முனைப்பு காட்டி வருகிறது.

இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18 - வது முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் நாளை பதவியேற்க உள்ளார். இதேபோல், ராஜஸ்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட்டும் நாளை  பொறுப்பேற்க உள்ளார். ஒரே நாளில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் ராகுல்காந்தி கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் படி, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளின், விவசாயக் கடனை விரைவில் தள்ளுபடி செய்வோம்.  என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து