முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப் படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருத்தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து