முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வள்ளியூர் தவசிமுத்து மறைவுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வள்ளியூர் அ.தி.மு.க. பேரூராட்சி செயலாளர் தவசி முத்து மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்தி வருமாறு.,

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் வி.ஐ.தவசி முத்து மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். கட்சித்தலைமையின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் தவசிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து