முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யார் எங்கு சென்று சேர்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு இல்லை - அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : யார் எங்கு சென்று சேர்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு ஏற்படாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அரசு பரிசீலனை...

சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

உலக மீனவர் தின நிகழ்ச்சி இன்று (நேற்று) சிறப்பாக நடத்தப்படுகிறது. பழவேற்காட்டில் மீன்வளத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து சுற்றுலா பாதிக்காத வகையில் உள்ளூர் மீனவர்களைக் கொண்டு படகு சவாரிக்கு அரசு பரிசீலனை செய்துவருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடாத அளவில் அந்தப் பகுதி மக்கள் வாழ்வாதாரம் பெருகும் வகையில் அரசு பல்வேறு யோசனைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. பழவேற்காட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளது என்றார்.

தொடர்ந்து நிருபர்கள் தி.மு.க. கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

பின்னடைவு ஏற்படாது...

நபிகள் நாயகத்தை வீழ்ந்த பல்வேறு பிரிவினர் ஒன்று கூடி நின்றபோது நபிகள், அவர்களிடம் இல்லாத ஒன்று நம்மிடம் உள்ளது. அது கடவுள் துணை. எனவே நாம் எதற்கும் பயப்படவேண்டியதில்லை என்று கூறி வெற்றியும் பெற்றார். அது போல தி.மு.க. எத்தனைக் கூட்டணி அமைத்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. மக்கள் எங்களுக்குத் துணை இருக்கும்போது அவர்கள் எத்தனைக் கட்சி மற்றும் எத்தனைக் கூட்டணி சேர்த்தாலும் சரி அதைப் பற்றி நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. யார் எங்குச் சென்று சேர்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு ஏற்படாது.

ஆள் பிடிக்கும் வேலை...

தி.மு.க. பலவீனமாக இருப்பதால்தான் இப்போது ஆள் பிடிக்கும் வேலையை செய்துவருகிறார்கள். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு உண்மையான அ.தி.மு.க. தொண்டன் எம்.ஜி.ஆரையும், அம்மாவையும் ஏற்றுக்கொண்டவன் நிச்சயமாக வேறு எந்த கட்சிக்கும் போகமாட்டான். இலங்கை சிறையில் இருந்த 38 மீனவர்களில் 22 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இன்னும் 16 மீனவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து