முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் மலைப் பாதையில் சென்ற வேன் தவறி விழுந்து விபத்து: 20 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

காத்மண்டு : நேபாளத்தில் மலைப் பாதையில் சென்ற வேன் ஒன்று தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

நேபாளத்தில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் கியான்பேடி பகுதியில் உள்ள மலை பாதையில் பாதை தடுமாறி, சுமார் 13,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் வேன் அதீத வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நேபாளத்தில் மலைப் பாதையில் உள்ள மோசமான சாலைகளின் காரணமாக அங்கு விபத்து கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து