முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் வாங்காமல் காங்கிரஸ் வஞ்சகம் செய்தது - பிரதமர் மோடி கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ரேபரேலி : ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் வாங்காமல் வஞ்சகம் செய்தது காங்கிரஸ் என்று ரேபரேலியில் நடந்த விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடக்கவில்லை. நாங்கள் வளர்ச்சி பணிகளுக்கும், ராணுவ முன்னேற்றத்திற்கும் பாடுபடுகிறோம். 2009-ல் ராணுவ வீரர்களுக்கு புல்லட் புரூப் ஆடைகள் தேவைப்பட்டது. ஆனால், காங்கிரஸ் வாங்க அனுமதி வழங்கவில்லை. எங்கள் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புல்லட் புரூப் ஆடைகள் உள்ளன. காங்கிரசை இந்த நாடு மன்னிக்காது.

விவசாயிகளுக்கு பா.ஜ.க. அரசு பல்வேறு நல்லத் திட்டங்களை செய்து வருகிறது. காங்கிரஸ் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகைள நிறைவேற்றவில்லை. விவாயிகளுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் செய்துள்ளது பா.ஜ.க.

பா.ஜ.க. நாட்டிற்காக உழைக்கிறது. காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்காக உழைக்கிறது. ஹெலிகாப்டர் ஊழலில் தரகருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது. இவரை காப்பாற்ற காங்கிரஸ் வழக்கறிஞரை அனுப்புகிறது. தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் இடையூறாக உள்ளது. காங்கிரசின் செயல்களை பாகிஸ்தான் பாராட்டுகிறது. நமது நாட்டை பலவீனப்படுத்த விரும்புபவர்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நேற்று ரூ. 1,100 கோடி மதிப்பிலான , நவீன ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை , லக்னோ - பந்தல் கண்ட் தேசியநெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உ .பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பியஷ் கோயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து