முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : உடல்நலக் குறைவால் மரணமடைந்த தமிழ்நாடு விஸ்வகர்மா சமுதாய தலைவர் கே.பி. சுப்பையன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு விஸ்வகர்மா சமுதாய தலைவரும், கோவை லட்சுமி ஜூவல்லரி உரிமையாளருமான கே.பி சுப்பையன், கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் 15.12.2018 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கே.பி சுப்பையனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து