முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றார் - கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் 3-வது முறையாக முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் நேற்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக் கொண்டார்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்தன. இதையடுத்து அந்த மாநிலத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில் நடந்த சமரசத்திற்குப் பின் அசோல் கெலாட்டுக்கு முதல்வர் பதவியும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, ஜெய்ப்பூரில் நேற்று காலை 10 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சரத்யாதவ், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, லல்லுவின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் ஹால் மைதானத்தில் நேற்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கவர்னர் கல்யாண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து