முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை, ரபேல் விவகாரத்தை எழுப்பி பார்லி.யில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பியதை தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் இந்த விவகாரத்தை தமிழக எம்.பி.,க்கள் எழுப்பினர்.

காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வரைவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே தமிழக எம்.பி.க்கள் காவிரி விவகாரத்தை இரு அவைகளிலும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து நேற்றும் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து கோஷமிட்டனர்.  தி.மு.க. எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி அ.தி.மு.க. கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது, தி.மு.க. எம்.பி.க்களும் சேர்ந்து கோஷங்களை எழுப்பி அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இதனால் அமளி ஏற்பட்டது. இது போலவே ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையில் அமளி செய்தனர். இதனால் அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து, அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். இதுபோலவே மக்களவையிலும் மேகதாது பிரச்சினை எதிரொலித்தது. இதனால் இரண்டுமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து