முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அந்த குடும்பம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும். அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை,-      சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்   தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெ.ஜெயகாந்தன்,  தலைமை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி பேசுகையில்,
         மறைந்தும் மறையாமலும் தமிழக மக்கள் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய  தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியுடன் மாண்புமிகு அம்மா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் தனது கனவு திட்டங்களின் ஒன்றான உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்க உத்தரவிட்டிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அம்மா அவர்களின் திட்டத்தை நிறைவேற்றும்விதமாக திட்டம் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நடப்பாண்டிற்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் மகளிர் திட்டத்தின் மூலம் நலத்திட்டங்கள் வழங்க திட்;டமிடப்பட்டு இதுவரை ரூ.36 கோடி அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா இருசக்கர வாகனம் வழங்குவதற்கு 1,919 பயனாளிகள் தேர்வு செய்து வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 184 பயனாளிகளுக்கு ரூ.46 இலட்சம் மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல்  அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதியில் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
    இத்திட்டத்தின் நோக்கம் பெண்கள் பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்க வேண்டும். தனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள முன்வர வேண்டும் என்பதேயாகும். பொதுவாக வீட்டில் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் இருந்தால் அந்த வீடு முழுமையான வளர்ச்சியை பெரும். அந்த வகையில் பெண்கள் சுயமாக தொழில் செய்திடவும் தங்களது கல்விக்கேற்ப பணிகளை அமைத்துக் கொள்ளவும் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் தங்கள் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடித்திட ஏதுவாக அவர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு 50 சதவிகித மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்க உத்திரவிட்டு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக வறுமையில் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு நாளும் சிந்தித்து திட்டங்களை வழங்கி மக்களுக்காகவே வாழ்ந்த தலைவராவார். குறிப்பாக கருவறையிலிருந்து ஒரு மனிதனின் இறுதிக்காலம் வரை வாழ்க்கைக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தந்த ஒரே தலைவர்   அம்மா அவர்களே. அவர்களின் வழியில் ஆட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது இந்த அரசு அதிகக் கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருகிறேன். பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். உடனடியாக சரிசெய்யப்படும். மேலும் அரசின் திட்டங்களை தகுதியுடைய பயனாளிகள் பயன்பெற்றுக் கொள்ள வேண்டுமென  மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஜி.பாஸ்கரன் அவர்கள் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து