முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் விவசாயக் கடன தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விடமாட்டோம்: ராகுல் காந்தி

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளும் பெற்றக் கடனை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை நாங்கள் தூங்க விட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.

பாராளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு முழுவதும் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கும் 15 தொழிலதிபர்கள் பெற்ற கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அவர்களில் அனில் அம்பானியும் ஒருவர். ஆனால் வாழ வழியில்லாமல் தவிக்கும் அப்பாவி விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாரில்லை.

காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 10 நாட்களில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி இரண்டு மாநிலங்களில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளோம். அனைத்து விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை நாங்கள் தூங்க விடப் போவதில்லை.
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து