முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே ஏழை,எளியோருக்கு பயன்தரும் அன்பு பெட்டகம்: மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் திறந்து வைத்தார்:

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஏழை எளியோருக்கு பயனளித்திடும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்பு பெட்டகத்தை மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் கூத்தியார்குண்டு விலக்கு பகுதியில் ஏஆர்சி குழுமம் மற்றும் மதுரை வட்ட லேடீஸ் சர்க்கிள் எண்.8 அமைப்பின் கூட்டு முயற்சியால் ஏழை,எளிய மற்றும் ஆதரவற்றோர் பயன்பெற்றிடும் வகையில் அன்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டகத்தில் நல்ல நிலையில் உள்ள உடைகள்,காலணிகள்,குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள்,காலணிகள்,புத்தகங்கள்,பைகள் மற்றும் வீட்டு உபயோக சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.இந்த பொருட்களை தேவையென்று நினைத்திடும் பொதுமக்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப் பட்டுள்ளது.இத்தகைய சிறப்புமிக்க இந்த அன்பு பெட்டகத்தின் திறப்பு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை சரக டி.ஐ.ஜி.,பிரதீப்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்பு பெட்டகத்தை திறந்து வைத்தார்.பின்னர் அன்பு பெட்டகத்தை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்ட அனைவருக்கும் டி.ஐ.ஜி பிரதீப்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கப்பலூர் ஆனமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி பிரதீப்யாதவ் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதற்கான ஏற்பாடுகளை ஆனமலைஸ் டெயோட்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.ரகுராம்,திருமதி.சுகன்யாரகுராம்,நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஆர்.சேதுராஜன்,மதுரை மகளிர் வட்டம் எண்.8 சார்பில் நிர்வாகிகள் சுபிக்ஷா,வித்யா,மீனா,திவ்யா ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.இவ்விழாவில் தொழிலதிபர் ஹரிதியாகராஜன்,ஏ.டி.எஸ்.பி.,நரசிம்மவர்மன்,திருமங்கலம் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதனிடையே இந்த அமைப்பின் மூலம் மதுரையில் தொடங்கியுள்ள அன்பு பெட்டகத்திற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள படியால் தற்போது இரண்டாவதாக கப்பலூர் கூத்தியார்குண்டு விலக்கு பகுதியில் இந்த அன்பு பெட்டகம் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் எங்கள் அமைப்பின் மூலம் பல இடங்கயில் அன்பு பெட்டகங்கள் அமைக்கப்படவுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து