முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 2 சதம் அடிப்பேன் என்கிறார் ரஹானே

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 2 சதம் எடுப்பேன் என்று ரஹானே உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்திய -ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இதுவரை 1-1 என்று சமனிலையில் உள்ளது. நாளை மெல்போர்னில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்திய தொடக்க வீரர்களின் கடும் சொதப்பல் காரணமாக புஜாரா, கோலி, ரஹானேவுக்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஹானே கூறியதாவது:-

பேட்ஸ்மென்கள் நிச்சயம் மேம்படுத்த வேண்டும்.  பேட்டிங் பற்றி விவாதிக்கும் போது இது மிகவும் முக்கியமான ஒரு புள்ளியாகும். பாக்சிங் டே டெஸ்ட் போட்டி, மெல்போர்ன் மைதானம், மிகப்பெரிய ரசிகர் கூட்டம், நான் உண்மையில் ஆர்வமாக இருக்கிறேன். ஒவ்வொரு செஷனிலும் சிறந்தவற்றை அளிக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முக்கியம். ஒரு செஷனில் ஆட்டம் மாறி விடும் என்பதால் நாம் 100 சதவீதத்திற்கும் அதிகமாக களத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டும். வரும் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மென்கள் இன்னும் கூடுதல் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை மெல்போர்னில் சதம் எடுப்பேன் என்று நினைக்கிறேன்.  ஏனெனில் அடிலெய்ட், பெர்த் டெஸ்ட் போட்டிகளில் நான் பேட் செய்த விதத்தைப் பார்க்கும் போது நிச்சயம் சதம் வரவேண்டும். நான் 2 சதங்கள் எடுப்பேன், ஆனால் பொதுவாக அவற்றைப் பற்றி சிந்திக்காமல் ஆட வேண்டும். சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அணிக்காக ஆடினால் போதும். சொந்த மைல்க ல்கள் பின்னால் வரும் என்று ரஹானே தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து