எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 435 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சமநிலையில்...
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த போட்டியில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
அகர்வால் அறிமுகம்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்.சி.ஜி. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அகர்வால் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். ‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. தனது முதல் டெஸ்டிலேயே தொடக்க வீரரான அகர்வால் முத்திரை பதித்தார். அவர் 76 ரன்கள் எடுத்தார். புஜாரா 68 ரன்னும், விராட்கோலி 47 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
2-வது நாள் ஆட்டம்
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. புஜாராவும் கோலியும் தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை தொடர்ந்து நம்பிக்கையுடன் எதிர் கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி அரை சதத்தை தொட்டார். 110 பந்துகளில் 6 பவுண்டரியுடன் அவர் 50 ரன்னை எடுத்தார். 105. 3-வது ஓவரில் இந்திய அணி 250 ரன்னை தொட்டது. மறுமுனையில் இருந்த புஜாரா மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 280 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். இந்த டெஸ்ட் தொடரில் இவருக்கு 2-வது செஞ்சூரியாகும். அடிலெய்டு டெஸ்டில் 123 ரன்கள் குவித்து இருந்தார்.
82 ரன்னில் அவுட்
67-வது டெஸ்டில் விளையாடும் புஜாராவுக்கு இது 17-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-வது செஞ்சூரியை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 103 ரன்னும், கோலி 69 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட்கோலி ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அவர் 82 ரன்னில் வெளியேறினார். 204 பந்துகளில் 9 பவுண்டரியுடன் கோலி இந்த ரன்னை எடுத்தார். அவரது விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றினார்.
300 ரன்னை தொட்டது
கோலி ஆட்டம் இழந்த போது இந்தியாவின் ஸ்கோர் 293 ரன்னாக இருந்தது. அவரும், புஜாராவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்தனர். அடுத்து ரகானே களம் வந்தார். கோலி ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் புஜாராவும் வெளியேறினார். அவர் 319 பந்தில் 10 பவுண்டரியுடன் 106 ரன்கள் எடுத்தார். கும்மின்ஸ் அவரை ‘அவுட்’ செய்தார். 5-வது விக்கெட்டுக்கு ரகானேயுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 126.3-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது.
ரோகித் அரைசதம்
தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்து இருந்தது. ரகானே 30 ரன்னிலும், ரோகித்சர்மா 13 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரகானே 34 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரிசப்பண்ட் களம் வந்தார். 161.5-வது ஓவரில் இந்தியா 400 ரன்னை தொட்டது. ரோகித்சர்மா 97 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். ரிசப்பண்ட் 39 ரன்னும், ஜடேஜா 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
443 ரன் குவிப்பு
இந்திய அணி 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது. கும்மினஸ் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ஆரோன் பிஞ்சும், ஹாரிசும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹாரிஸ் 5 ரன்களும், பிஞ்சு 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி 435 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ரோகித்தைக் கலாய்த்த ஆஸி.கேப்டன்!
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாளும் ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில் நேற்று காலை ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ரோகித்துக்கு டென்ஷனை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இதன் மூலம் அவர் தவறு செய்து ஆட்டமிழப்பார் என்பது அவர் எண்ணம்.
அதன்படி, ‘’ரோகித் சிக்சர் அடித்தால் ஐபிஎல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி ஆதரவு தெரிவிக்கிறேன்’’ என்று கலாய்த்தார். இதைக் கேட்டு அருகில் நின்ற ஆரோன் பின்ச் உள்ளிட்ட வீரர்கள் சிரித்தனர். இந்த கலாய், ஸ்டெம்ப்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் தெளிவாகக் கேட்டது. பெய்னின் கலாயை கண்டுகொள்ளாமல், ரோகித் சர்மா மெதுவாக ஆடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.