முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையில் மகத்தான மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

 கம்பம்,- தேனி மாவட்டம் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனர் கவிஞர் பாரதனின் மகத்தான மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.கம்பம் கோட்டை மைதானத்தில் உள்ள முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் தலைமை வகித்தார்.ஆர்.ஆர்.இண்டர்நேஷனல் பள்ளி சேர்மன் ஆர்.இராஜங்கம்,துணை சேர்மன் ஆர்.அசோக்குமார், வர்த்தகப் பிரமுகர் எம்.கே.எஸ்.சந்திரசேகரன்,வின்னர் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அ.அலீம்,மீரா ஹோட்டல் அதிபர் மீரா ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாரதி தமிழ் இலக்கிய பேரவை துணைத் தலைவர் எஸ்.சேதுமாதவன் அனைவரையும் வரவேற்றார்.மதுரை வைகை இலக்கியக் கழகம் தலைவர் மு.சிதம்பரபாரதி நூலை வெளியிட ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் க ல்லூரி செயலாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் நா.இராமகிருஷ்ணன் நூலை பெற்றுக் கொண்டார்.க ல்லூரி பேராசிரியர் அப்துல் சமது நூல் அறிமுக உரையாற்றினார்.நூல் ஆசிரியரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுனருமான பாரதிச் செல்வர் கவிஞர் பாரதன் ஏற்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் நேதாஜி ஆதரவற்றோர் இல்ல நிறுவனர் பஞ்சுராஜா,தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி.முருகேசன், நகர காங்கிரஸ் தலைவர் கே.சி.போஸ்,வர்த்தக சங்கத் தலைவர் எல்.முருகன்,கண்ணகி அறக்கட்டளை செயலாளர் த.ராஜ்கணேஷ் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிர்வாகிகள் ஓ.ஆர்.இராஜா,பா.அங்கயற்கண்ணி,மருத்துவர் த.பூர்ணிமா,ஜான்சிராணி,புவனேஸ்வரி உள்பட ஏராளமனோர் பங்கேற்றனர்.பாரதி தமிழ் இலக்கியப் பேர¬ துணைத் தலைவர் கு.தருமர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து