முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஸ்கோடி அருகே இலங்கை பகுதியை சேர்ந்த மர்ம படகு: மத்திய,மாநில போலீஸார்கள் விசாரணை.

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேஸ்வரம்,- தனுஸ்கோடி, சேரான்கோட்டை கடற்பகுதியில் நேற்று அதிகாலையில் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இலங்கை பகுதியை சேர்ந்த மர்ம பைபர் படகு குறித்து மத்திய,மாநில போலீஸார்கள்  தீவிர விசாரணை நடத்தி வரகின்றனர்.
  ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பரப்பில் சேராங்கோட்டை கடற்கரையில் நேற்று அதிகாலையில் மர்ம படகு ஒன்று இருப்பதாக ராமேசுவரம் மாநில உளவுப்பிரிவு போலீஸார்களுக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீஸார்கள் அப்பகுதியில் இருந்த பைபர் படகை கைப்பற்றி சோதணையிட்டனர்.அப்போது இந்த படகு இலங்கை பகுதிடை சேர்ந்தது என தெரியவந்தது.மேலும் படகில் என்ஜின்,மண்ணெண்னய்,மீன்பிடி வலை ஆகிய பொருள்கள் இருந்துள்ளனர்.பின்னர் போலீஸார்கள் படகு மற்றும் பொருள்களை கைப்பற்றினர்.பின்னர் இது குறித்து வழக்கு பதிந்து இப்படகில் வந்தது கடத்தல்காரர்களா,அல்லது தீவிரவாதிகளா என்பது குறித்து சந்தேகத்தின் பேரில்  மத்திய,மாநில உளவுப் பிரிவு போலீஸார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து