முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் துருக்கி ஆதரவு படையினர் 120 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் கடந்த 5 நாட்களில் அல் கொய்தா தீவிரவாத கிளை அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படையினர் 120 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடர்ந்து 7-வது ஆண்டாக நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும்,  சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படையினரும் போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹயத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற அமைப்பும், துருக்கி ஆதரவு பெற்ற அல் ஜென்கி என்ற கிளர்ச்சி படையினரும் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் கடந்த 5 நாட்களில் கிளர்ச்சி படையை சேர்ந்த 120 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து அல் ஷாம் தீவிரவாத அமைப்பினர் அலெப்போ நகரில் உள்ள 23 கிராமங்கள் மற்றும் நகரங்களை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து