முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தான்சானியா, எத்தியோப்பியா, மணிப்பூர் கலைஞர்கள் பங்கேற்கும் ஜம்போ சர்க்கஸ்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

இந்திய மக்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ஜம்போ சர்க்கஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்.ஐ.ஏ.ஏ. மைதானத்தில் நடக்கிறது.

தான்சானியா, எத்தியோபியா மற்றும் மணிப்பூர் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த ஜம்போ சர்க்கஸ், கடந்த 1977-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி பீகார் தானாபூரில் தனது முதல் நிகழ்ச்சியை இந்திய சர்க்கஸின் தந்தையான எம்.வி. சங்கரன் தலைமையில் நடத்தியது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புகழ் பெற்ற தலைவர்களான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஜோதிபாசு, எம்.ஜி.ஆர், என்.டி. ராமாராவ், இ.கே. நாயனார் ஆகியோர் இந்த சர்க்கஸுக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளனர். நமது சர்க்கஸ் குழுவை மாஸ்கோ போன்ற இடங்களுக்கு தலைமையேற்று எம்.வி. சங்கரன் நடத்தி சென்றார். அலெக்சாண்டர் வோலோஷீன் மற்றும் முதல் ரஷ்ய வீராங்கனையான டெரஸ்கோவா வாலன்டைன் ஆகியோரின் பாராட்டுதல்களை பெற்றனர். அந்த மொத்த குழுவினருக்கும் இந்திய அரசு சிறப்பான டிப்ளமோட் விசா வழங்கியது. இந்தியாவிலேயே மிக சிறந்த நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய குழுவினராதலால் அவர்களுக்கு இந்த மிக உயரிய கவுரவம் வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி 1960-களில் ரஷ்ய சர்க்கஸின் டைரக்டரான வோலோஷின் தனது ரஷ்ய சர்க்கஸ் குழுவினருடன் இந்தியாவுக்கு வந்து ஜம்போ சர்க்கஸ் குழுவினருக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்தார்.

மகேஷ் மற்றும் தன்யா வழங்கும் இருபக்க அக்ரேபேடிக்ஸ், தான்சானியா கலைஞர்கள் வழங்கும் யோகா அக்ரோபேடிக்ஸ் கலைஞர்கள், லேடர் பேலன்ஸ், ரோலர் பேலன்ஸ், யுனிசைகிளிஸ்ட் அனைவரையும் வியக்க வைக்கும். அது மட்டுமல்லாது, ஸ்டிக் பேலன்ஸ், கண் ஸ்பிரிங்நெட், செங்குத்தாக ஊஞ்சலாடும் அக்ரோபேட் மற்றும் ரஷ்யன் ரோப் பேலன்ஸ் போன்ற புதிய நிகழ்ச்சிகளும், இதை தவிர குதிரை சவாரி, பிளையிங் டிராப்பீஸ், நீண்ட ரோப்பில் செய்யும் அக்ரோபேடிக்ஸ் என்ற குளோப் ஆப் டெத் நிகழ்ச்சியில், மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் இருட்டில் செல்வது பிரமிக்க வைக்கும். எத்தியோபிய கலைஞர்கள் வழங்கும் புட் அக்ரோபேடிக்ஸ் ஜெர்மன் வீல் ஆக்ட் மற்றும் லூஸ்வையர் டிரிங்கிங் ஆகிய விளையாட்டுகள் சீட்டின் விளிம்பிற்கு நம்மை நகர்த்தும். ஆண்கள் மற்றும் பெண்கள் நிகழ்த்தும் வீல் ஆப் டெத் என்ற புதிய நிகழ்ச்சி உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவரும். ஏறக்குறைய 100 பணியாளர்கள் உள்ள இந்த ஜம்போ சர்க்கஸ், இந்தியாவிலேயே சிறந்த சர்க்கஸாக ஜம்போ சர்க்கஸ் விளங்குவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. பணியாளர்களின் விருப்பமான தேர்வு என்ற அடிப்படையிலும் ஒரு தனிப்பட்ட கலைக்குழுவின் மதிப்பீட்டின்படி மிக சிறந்த தரமான கேளிக்கைகளை அளிக்கும் சர்க்கஸ் என்ற அடிப்படையிலும் என்றென்றும் ஜம்போ சர்க்கஸ் இந்திய மக்களிடையே ஒரு இடத்தை பிடித்துள்ளது. மதியம் ஒரு மணி, மாலை 4 மணி மற்றும் 7 மணி என தினசரி 3 காட்சிகளாக நடைபெறும். இதற்கான டிக்கெட்டுகள் ரூ. 100, 200, 300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அட்வான்ஸ் புக்கிங் செய்ய ரூ. 300 கட்டணமாகும். டிக்கெட்டுகளை தொலைபேசி மூலம் பெற 79077 86009 என்ற எண்ணில் பெற்றுக் கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து