முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 மற்றும் 9-ம் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாடு முழுவதும் வருகின்ற நாளை  8-ம் தேதி மற்றும் 9-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாளை 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா ஆகிய 2 வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து