முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட அ.ம.மு.கவினர் முதல்வர் எடப்பாடியுடன் சந்திப்பு: அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கடலூர் மாவட்டம், அண்ணாகிராமத்தை சேர்ந்த அ.ம.மு.கவை சேர்ந்த ஏராளமானவர்கள் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.

அ.ம.மு.கவை சேர்ந்த கடலூர் கிழக்கு மாவட்டம்,அண்ணாகிராமம் ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைச்செயலாளர். காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் சாந்தா காசிநாதன், ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் உக்கரவேல், சுந்தரவாண்டி ஊராட்சி மன்றமுன்னாள் தலைவர், வேணுநாதன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க., மாவட்டப் பிரதிநிதிகள். வீரன்,செங்கேணி குருமூர்த்தி மற்றும் ராஜேஷ், முருகவேல் ஆகியோரும்; பண்ருட்டி நகர துணைச் செயலாளர் ஸ்டாலின், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் சின்னா (எ) அசோக்குமார், நகர மாணவர் அணிச்செயலாளர. பிரபு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து